News September 19, 2024
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்கு

சென்னை மாநகராட்சியில் கடந்த 2018ம் ஆண்டு விதிகளை மீறி டெண்டர் ஒதுக்கியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். மழைநீர் வடிகால், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில் ₹26.61 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது.
Similar News
News August 7, 2025
கோவையில் 5 முகம், 8 கரங்கள் கொண்ட முருகன்!

கோவை: அன்னூர் அருகே இரும்பொறையிலிருந்து 4 கி.மீ தொலைவில் ஓதிமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோயில் பழநி மலையை விடவும் பழமையானதாகும். ஓதிமலை முருகன் 5 தலையுடனும் 8 கைகளுடனும் காட்சி தருகிறார். பொதுவாக, அனைத்துக் கோயில்களிலும் மூலவர் சிலை பீடத்தின் மீதே நிறுவப்பட்டிருக்கும். ஆனால், இக்கோயில் மூலவர் முருகன் சிலை பாறையின் மீது நிறுவப்பட்டிருருப்பது விசேஷம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள இதை SHARE பண்ணுங்க!
News August 7, 2025
கோவையில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்!

கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், கடந்த ஏழு மாதங்களில் 4,560 ஆன்லைன் மோசடி புகார்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இவற்றில், 350-க்கும் மேற்பட்டவை நிதி மோசடி சார்ந்த வழக்குகள் எனவும், 160-க்கும் மேற்பட்டவை பண இழப்பு சார்ந்த வழக்குகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 40-க்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடி புகார்கள் வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
News August 7, 2025
கோவை: டிகிரி போதும்.. புலனாய்வுத் துறையில் வேலை!

கோவை மக்களே, இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு(Intelligence Bureau) அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். ஏதெனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஆக., 10-ம் தேதிக்குள் இந்த <