News September 18, 2024
ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களின் கவனத்திற்கு

சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதனை நிவர்த்திச் செய்யும் பொருட்டு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.
Similar News
News August 25, 2025
சேலத்தில் செப்.1 முதல் இலவசம்! மிஸ் பண்ணிடாதீங்க (1/2)

EDII சார்பில், சேலத்தில் உள்ள பெண்களுக்கு இலவச தொழில் முனைவு பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரு மாதம் நடைபெறும். இந்த பயிற்சியில், 18 முதல் 48 வயதுக்குட்பட்ட பெண்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் பெண்கள், எஸ்.பி. பங்களா பின்புறம், சக்தி நகர், சேலம் – 636 007′ என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 99443 – 92870 அழைக்கலாம்.(<<17508965>>தொடர்ச்சி<<>>)
News August 25, 2025
சேலத்தில் செப்.1 முதல் இலவசம்! மிஸ் பண்ணிடாதீங்க (2/2)

சேலம்: செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரு மாதம் நடைபெறும் இந்த பயிற்சியில், 18 முதல் 48 வயதுக்குட்பட்ட பெண்கள் கலந்துகொள்ளலாம். இதில் சிறுதானிய லட்டு, இனிப்பு, கார வகைகள், ஊறுகாய், ஜாம் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கும் செய்முறை பயிற்சி அளிக்கப்படும். அத்துடன், வங்கிக் கடன் பெறுதல், மானியம் பெறுதல் மற்றும் திட்ட அறிக்கை தயாரித்தல் போன்ற நிதி சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்படும். இதனை (ஷேர் பண்ணுங்க)
News August 25, 2025
24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் வழங்க புதிய திட்டம்

சேலம் மாநகராட்சியில் வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரூ.758 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம் ஒன்று தொடங்கப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் 10 லட்சம் மக்கள் பயன்பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.