News September 18, 2024

பருவமழை: குடியிருப்போர் சங்கங்களுக்கு பயிற்சி

image

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது. அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் உள்ள குடியிருப்போர் சங்கங்களின் பட்டியலை தயாரித்து விழிப்புணர்வு மற்றும் பேரிடர் ஆயத்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கான அறிவுறுத்தல்கள் மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டங்கள் மூலம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Similar News

News September 15, 2025

சென்னையில் கூடுதலாக பருவ மழை; வானிலை ஆய்வு மையம்

image

சென்னையில் வழக்கத்தை விட கூடுதலாக பருவ மழை பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் தென்மேற்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 18% கூடுதலாகவும், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று வரை 3% குறைவாகவும் பெய்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

News September 15, 2025

சென்னை: டிகிரி போதும்! ரயில்வேயில் வேலை

image

ரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.’

News September 15, 2025

பருவமழைக்கு தயாராகும் மாநகராட்சி

image

கனமழையை எதிர்கொள்ள, சென்னை மாநகராட்சி 7,000 குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளது. இதில், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது, உணவு விநியோகிப்பது போன்றவை கற்றுத் தரப்படும். அதேசமயம், தொங்கும் மின்கம்பிகள், முடிக்கப்படாத மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!