News September 18, 2024

இந்திய கூட்டணி பந்த் வெற்றி – திமுக நன்றி

image

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்பாளருமான சிவா உயர்த்தப்பட்ட மீன் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெறக்கோரி இன்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர் இந்த பந்த் 100% வெற்றி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கூட்டணி தலைவர்களை கலந்தாலோசித்து அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகும் என்றார்.

Similar News

News September 15, 2025

புதுவை பாண்லே ஊழியரிடம் 6 சவரன் நகை பறிப்பு

image

புதுவை சண்முகாபுரத்தைச் சேர்ந்த பாண்லே அலுவலகத்தின் சீனியர் அசிஸ்டென்ட் விஜயலட்சுமி என்பவர் நேற்று முன்தினம் இரவு கதிர்காமத்தில் உறவினர் வீட்டில் இருந்த தனது மகள்களை அழைத்து கொண்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு செல்லும்போது, பின்னால் பைக்கில் வந்த நபர், விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தாலி செயினை பறித்து தப்பி சென்றதாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News September 15, 2025

புதுவை: மத்திய அரசில் இன்ஜினியர் பணி அறிவிப்பு

image

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc., B.E., B.Tech., M.Tech., M.E., படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் செய்து<<>> செப்.17-ம் தேதிக்குள்ளாக விண்ணபிக்க வேண்டும். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

News September 15, 2025

புதுவை: ரூ.23.77 கோடி மானியம் வழங்க கவர்னர் ஒப்புதல்

image

புதுச்சேரியில் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனைக் கண்டித்து அரசு நிதி உதவிபெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். ஆசிரியர்களின் 5 மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நிலுவைத் தொகை என மொத்தம் ரூ.23.77 கோடி மானியம் வழங்க கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.

error: Content is protected !!