News September 18, 2024

என்கவுன்டர் நடந்த இடத்தில் காவல் துணை ஆணையர் ஆய்வு

image

வியாசர்பாடியில் காக்காதோப்பு பாலாஜி என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல் துணை ஆணையர் முத்துகுமார் ஆய்வு செய்தார். இன்று அதிகாலை, பாலாஜியை, போலீசார் கைது செய்ய முயன்றபோது, அவர், போலீசாரை சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றதால் என்கவுன்டர் செய்யப்பட்டதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 16, 2025

சென்னை: உங்க ஏரியால எவ்வளவு மழை தெரியுமா?

image

சென்னை மாவட்டத்தில் நேற்று (செப் 15) காலை 8:30 முதல் இன்று காலை 6:30 மணி வரை தாலுகா வாரியாக அயனாவரம் – 68, எழும்பூர் – 42.8, கிண்டி – 27.4, மாம்பலம் – 59.6, மயிலாப்பூர் – 82.6, பெரம்பூர் – 4.3, புரசைவாக்கம் – 22, தண்டையார்பேட்டை – 61, ஆலந்தூர் 10.9, அம்பத்தூர் – 35, சோழிங்கநல்லூர் – 71.5 என மி.மீட்டரில் மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.

News September 16, 2025

சென்னை: மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி பலி

image

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலில் ரமேஷ் (48) என்பவர் பயணம் செய்தார்.
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நுழைந்தபோது, ரமேஷ் ஓடும் ரயிலில் இருந்து தவறி நடைமேடையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 16, 2025

சென்னையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

image

சென்னையில் 10 இடங்களில் இன்று “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
திருவொற்றியூர், மணலி, இராயபுரம், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில் முகாம் நடைபெறுகிறது. முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!