News September 17, 2024
ஜெர்மனியில் நர்ஸ் வேலை.. ரூ.3 லட்சம் சம்பளம்

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஜெர்மனியில் செவிலியர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சேருவோருக்கு இலவசமாக ஜெர்மன் மொழி கற்றுத்தரப்படும். மாத சம்பளம் 2,300 முதல் 3,300 யூரோ (ரூ.2 லட்சம் – 3 லட்சம்). வயது வரம்பு: 35 வயதிற்குள். கல்வித் தகுதி: Bsc or GMN. கூடுதல் தகவல்களை நான் முதல்வன் வலைதளத்திலோ, செய்தி மக்கள் தொடர்புத்துறை சமூக ஊடக பக்கங்களிலோ தெரிந்து கொள்ளலாம்.
Similar News
News April 27, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, மதுரை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
News April 27, 2025
தங்கம் விலை மேலும் குறையுமா?

தங்கம் விலை கடந்த 4 நாள்களாக கிணற்றில் போட்ட கல்லைப் போல் ஏற்ற இறக்கமின்றி அசையாமல் உள்ளது. இதனால், நகை விலை குறையும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்துப் பேசிய ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை தற்போதைய சரிவுக்கு டிரம்ப் தான் காரணம், அவர் சீக்கிரமே மாற்றிப் பேசுவார். இதனால் தங்கம் விலை கிராமுக்கு ₹10,000-ஐ தாண்டும். எனவே தேவை என்றால் வாங்கிக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
News April 27, 2025
பஹல்காமில் மீண்டும் சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக இருந்த பஹல்காமில், பயங்கரவாத தாக்குதலால் சுற்றுலா தொழில் முடங்கியது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பஹல்காமுக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். எனினும், சம்பவம் நடந்த பைசரன் பள்ளத்தாக்கில் மட்டும் சுற்றுலா பயணியரை பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை. காஷ்மீரை முடக்க நினைக்கும் பயங்கரவாதிகளுக்கு பயணியரின் வருகை சரியான பதிலடி!