News September 17, 2024
ஆலங்குடியில் மாடியில் இருந்து தவறி விழுந்து பலி

பாலவாக்கம் பெரியார் ரோடு பசும்பொன் தேவர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவர் ஆலங்குடி அருகே வடக்கு அரையப்பட்டி கிராமத்தில் உள்ள தனது மகள் கனகலெட்சுமி வீட்டிற்கு வந்தார். அப்போது மகள் வீட்டின் மாடியில் விநாயகர் சிலை வைத்து பூஜைநடை பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து செல்வராஜ்வீட்டின் மாடியில் விநாயகரை தரிசித்துவிட்டு இறங்கி வந்தபோது மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்துவிட்டார்.
Similar News
News August 23, 2025
இந்திய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக அழைத்து பேசி தீர்த்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையத்தின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் ஆதரவு போராட்டம் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் புதுக்கோட்டை மண்டல தொழிலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் 100க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
News August 22, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10, மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News August 22, 2025
புதுகை: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு !

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய 6 கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <