News September 17, 2024

கரூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

image

கரூர் ஜவஹர் பஜார், உழவர் சந்தை, பேருந்து நிலையம், திண்ணப்பா கார்னர், மனோகரா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதையை சிலர் கடைகளை அமைந்திருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்தனர். .இதனையடுத்த நேற்று அதிகாரிகள், ஊழியர்களுடன் சென்று ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். தொடர்ந்து ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Similar News

News November 10, 2025

கரூர்: ஓய்வு பெற்ற ஆசிரியர் கார் மோதி பலி!

image

மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் பெரியசாமி (80) நேற்று காலை மொபட்டில் மகாதானபுரம் சென்ற இவர், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், மகாதானபுரம் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்த போது கார் மோதி படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 10, 2025

கரூர் அருகே கோர விபத்து; மூதாட்டி படுகாயம்

image

கரூர், தாந்தோணி மலை வெங்ககல்பட்டியைச் சேர்ந்த தங்கமணி (60) நேற்று வெங்ககல்பட்டி பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத பைக் மோதி காயமடைந்தார். அவருக்கு வலது முழங்கால், இடது கையில் காயம் ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து தங்கமணி புகாரின் பேரில் தாந்தோணி மலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 9, 2025

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு துவங்கி வைக்கும் ஆட்சியர்!

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாளை(10.11.25) காலை 10.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்கும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்க உள்ளார்கள். மேலும் இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்களும் அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள்.

error: Content is protected !!