News September 17, 2024

புதுச்சேரி: போக்குவரத்து நெரிசல் சிக்கிய கவர்னரின் கார்

image

கவர்னர் கைலாஷ்நாதன் மரப்பாலம் வழியாக அரிக்கன்மேடுக்கு ஆய்வு செய்ய நேற்று சென்றார். வழக்கமாக கவர்னர் வரும்போது, டிராபிக் அனைத்தையும் நிறுத்தி வழி ஏற்பாடு செய்யப்படும். ஆய்வு முடித்து கவர்னர் திரும்பியபோது, முருங்கப்பாக்கத்தில் வழக்கமான டிராபிக்கில் கவர்னர் காரும் சிக்கியது. போக்குவரத்து போலீசார் என்ன செய்வது என தெரியாமல், அவசர அவசரமாக போக்குவரத்தை சரிசெய்து கவர்னர் காருக்கு வழி ஏற்படுத்தினர்.

Similar News

News September 15, 2025

புதுச்சேரி: டென்னிஸ் போட்டி பரிசளிப்பு விழா

image

புதுச்சேரியில் என்.ஆர் கோப்பைக்கான ஆல் இந்தியா லெவல் டென்னிஸ் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை கோரிமேட்டில் தொடங்கியது. போட்டியில், தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 553 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.நேற்று இரவு இறுதிப் போட்டி நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

News September 15, 2025

புதுச்சேரி: எம்.எல்.ஏ நேரு கோரிக்கை

image

புதுச்சேரியில் தமிழுக்காக போராட்டம் நடத்துபவர்கள் வணிக நிறுவனங்களுக்கு சென்று விளம்பரம் மற்றும் பெயர்ப் பலகைகளை அடித்து நொறுக்குவது ஏற்புடையதல்ல. தமிழுக்கான இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறக்கூடாது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை நொறுக்கி சேதப்படுத்துவது வருந்தத்தக்கது. எனவே இச்செயலில் ஈடுபட வேண்டாம் என எம்.எல்.ஏ நேரு தெரிவித்துள்ளார்.

News September 15, 2025

புதுவை அரசு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி

image

திருக்கனுார், கூனிச்சம்பட்டு அண்ணா அரசு பள்ளியில் ‘மிஷன் வீரமங்கை’ என்ற தலைப்பில் தற்காப்புக் கலை பயிற்சி நிறைவு விழா பள்ளி வளாகத்தில் சீனியர் எஸ்.பி., ஈஷா சிங் ஏற்பாட்டில் நடந்தது. விழாவில், திருக்கனுார் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா கலந்து கொண்டு, தற்காப்புக் கலை பயிற்சியில் சிறந்து விளங்கிய 5 மாணவிகளுக்கு வீரமங்கை விருதும், பங்கு பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்களும் வழங்கினார்.

error: Content is protected !!