News September 16, 2024
திமுக பந்த் போராட்டம் போலி நாடகம்

புதுவையில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்ப பெற அதிமுக சார்பில் இன்று நடைப்பெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டு பேசிய எம்எல்ஏ நேரு ஆட்சியாளர்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் மக்கள் நலனில் அக்கறையில்லை மின் துறையை தனியார் மயமாக்க வேண்டிய அவசியம் என்ன சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக செயல்படாத திமுக பந்த் போராட்டம் அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என பேசினார்.
Similar News
News September 15, 2025
புதுச்சேரி: டென்னிஸ் போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரியில் என்.ஆர் கோப்பைக்கான ஆல் இந்தியா லெவல் டென்னிஸ் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை கோரிமேட்டில் தொடங்கியது. போட்டியில், தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 553 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.நேற்று இரவு இறுதிப் போட்டி நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
News September 15, 2025
புதுச்சேரி: எம்.எல்.ஏ நேரு கோரிக்கை

புதுச்சேரியில் தமிழுக்காக போராட்டம் நடத்துபவர்கள் வணிக நிறுவனங்களுக்கு சென்று விளம்பரம் மற்றும் பெயர்ப் பலகைகளை அடித்து நொறுக்குவது ஏற்புடையதல்ல. தமிழுக்கான இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறக்கூடாது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை நொறுக்கி சேதப்படுத்துவது வருந்தத்தக்கது. எனவே இச்செயலில் ஈடுபட வேண்டாம் என எம்.எல்.ஏ நேரு தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
புதுவை அரசு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி

திருக்கனுார், கூனிச்சம்பட்டு அண்ணா அரசு பள்ளியில் ‘மிஷன் வீரமங்கை’ என்ற தலைப்பில் தற்காப்புக் கலை பயிற்சி நிறைவு விழா பள்ளி வளாகத்தில் சீனியர் எஸ்.பி., ஈஷா சிங் ஏற்பாட்டில் நடந்தது. விழாவில், திருக்கனுார் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா கலந்து கொண்டு, தற்காப்புக் கலை பயிற்சியில் சிறந்து விளங்கிய 5 மாணவிகளுக்கு வீரமங்கை விருதும், பங்கு பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்களும் வழங்கினார்.