News September 16, 2024

பட்டாகத்தியால் கேக் வெட்டிய நபர் கைது

image

சென்னையில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, பட்டா கத்தியால் கேக் வெட்டிய இளைஞரை போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டையைச் சேர்ந்த சுதாகர் என்பவர் கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி கழுத்தில் மாலை, தலையில் கிரீடத்துடன், சாலை நடுவே பைக் மற்றும் கார்களை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியதாகக் கூறப்படுகிறது.

Similar News

News September 15, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (15.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News September 15, 2025

சென்னையில் விஜய் பிரசாரத்திற்கு தவெக மனு

image

செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 25 வரை சென்னை முழுவதும் தங்களது கட்சியின் சார்பில் பிரசாரம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தவெக கட்சி சார்பில் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் மக்களுக்கான செயல்திட்டங்களை விளக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள், பிரச்சார வாகனங்கள், துண்டுப்பிரசுரங்கள் மூலமாக பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

News September 15, 2025

சென்னையில் கூடுதலாக பருவ மழை; வானிலை ஆய்வு மையம்

image

சென்னையில் வழக்கத்தை விட கூடுதலாக பருவ மழை பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் தென்மேற்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 18% கூடுதலாகவும், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று வரை 3% குறைவாகவும் பெய்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!