News September 16, 2024
எடப்பாடியில் ஒரேநாளில் 7.48 கோடி ரூபாய்க்கு விற்பனை

சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள்
இயங்கி வருகின்றன. மேலும் நாளை புரட்டாசி மாதம் தொடங்குவதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் 7.48 கோடி ரூபாய்க்கு இறைச்சி விற்பனையானது.
Similar News
News August 24, 2025
சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதது. அதில், இணையம் வழியாக நிதி மோசடியில் பாதிக்கப்பட்டாலோ அல்லது சந்தேகத்துக்கிடமான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்தாலோ, உடனடியாக 1930 என்ற இலவச உதவி எண்ணை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார் தெரிவிக்க www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
News August 24, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News August 24, 2025
சேலத்தில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspslmdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0427-2418735 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!