News September 16, 2024
தி.மலை அருகே 48.5 லட்சம் பணம் பறிமுதல்; இருவர் கைது

வந்தவாசி பெட்டி நாடு தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (51).இவர் சட்டவிரோதமாக இணையவழியில் சூதாட்டம் நடத்துவதாக வந்த தகவலின் பெயரில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் கணினி மூலம் சூதாட்டம் நடத்துவது தெரிய வந்தது. இதையடுத்து மடிக்கணினி, 6 கைபேசிகள், 48.5 லட்சம் பணம், 82 பவுன் நகை ஆகியவை பறிமுதல் செய்து, செங்கல்பட்டு மாவட்டம் கோகுலபுரம் பகுதியைச் சேர்ந்த இப்ராஹிமையும் (44) போலீசார் கைது செய்தனர்.
Similar News
News August 25, 2025
தி.மலை மக்களே ரூ.3 லட்சம் மானியம் வேண்டுமா?

தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு Readymade Garments அமைக்க ரூ.3 லட்சம் மானியம் தருகிறது. தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி பொருளாதார மேம்பாடு அடைய Readymade Garments அமைக்க இது உதவும். கலெக்டர் ஆபிசில் உள்ள மாவட்ட பிற்படுத்தபிற்பட்டோர் நல அலுவலகத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. மேலும் விபரங்களுக்கு இங்கு <<17509961>>கிளிக் பண்ணுங்க<<>>
News August 25, 2025
தி.மலை மக்களே ரூ.3 லட்சம் மானியம் வேண்டுமா?

கார்மெண்ட்ஸ் அமைக்க அரசு தரும் ரூ.3 லட்சம் மானியம் பெற குறைந்து 10 பேரை உறுப்பினராக கொண்ட குழுவாக இருந்து விண்ணப்பிக்க வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் BC/MBC/DNC சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது 20 மற்றும் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். *பிஸ்னஸ் பண்ண நல்ல வாய்ப்பு ஷேர் பண்ணுங்க*
News August 25, 2025
திருவண்ணாமலை பின்னணியில் புதிய திரைப்படம்

பிக் பாஸ் ராஜு நடித்த ‘பன் பட்டர் ஜாம்’ படத்தை தயாரித்த சுரேஷ் சுப்பிரமணியன் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது, தி.மலை பின்னணியில் ஆன்மிக திரில்லர் கதையை படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். இதுகுறித்து அவர் திருவண்ணாமலை பின்னணி கதையில் பிரபலமான நடிகர் ஒருவரை நடிக்க வைக்க பேசி வருகிறோம் என்றார். தி.மலை பின்னணியில் புதிய படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.