News September 15, 2024
மினி பேருந்துகள் இயக்க வழித்தடங்கள் கண்டறிய உத்தரவு

தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளுக்கு மினி பேருந்துகள் இயக்குவதற்கு தகுதியான வழித்தடங்களை கண்டறிந்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேரில் அணுகி விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
Similar News
News January 9, 2026
தென்காசி பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி – APPLY!

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் மத்திய அரசு அங்கிகரிக்கப்பட்ட இலவச தையல் பயிற்சி மையம் ஸ்ரீ பவானி தையல் பயிற்சி மையத்தில் பேட்ச் வாரியாக வகுப்பு தொடங்கப்படுகிறது. இதில் 18 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் மட்டும் அனுமதி. பயிற்சி காலம் முடிந்தபின் மாணவிகளுக்கு மத்திய அரசால் தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். தொடர்புக்கு: 6385380815, 9445793675 இந்த எண்களில் அழைத்து பயன் பெறலாம். SHARE IT
News January 9, 2026
தென்காசியில் 35 கிராம் தங்கசெயின் பறித்தவர் கைது

தென்காசி, பாவூர்சத்திரம் ரயில் நிலையம் 1வது நடைமேடையில் நடந்து சென்ற பாவூர்சத்திரம் தெற்கு காந்தி நகரை சேர்ந்த ரத்தினசாமி மனைவி தனபாக்கியம் என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 35 கிராம் தங்கச் முறுக்கு செயினை பறித்து சென்றனர். செயின் பறித்து தலைமறைவாக இருந்த பாவூர்சத்திரம் சின்னத்தம்பி நாடார் பட்டியை சேர்ந்த சிவா என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்து தங்கச் செயினை பறிமுதல் செய்தனர்.
News January 9, 2026
தென்காசி மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

தென்காசி மாவட்டத்தில் போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க தென்காசி மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புகையில்லா போகி கொண்டாடுவோம் சுற்றுச் சூழலை பேணிக் காப்போம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.


