News September 15, 2024
என்னதான் நடக்குது புதுக்கோட்டை மாவட்டத்தில்?

புதுகை காமராஜபுரம் தமிழரசி கடைக்கு செல்வதாக போனவர் வீடு திரும்பவில்லை, அறந்தாங்கி கோட்டை பகுதியை சேர்ந்த ஜோதி கடைக்கு செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை, அரசர் குளம் ஆர்த்தி வீட்டில் இருந்தவர் கடைக்கு சென்றவர் வரவில்லை, கீழாத்தூர் சமத்துவபுரம் சொர்ணவல்லி மகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வீட்டை விட்டு சென்றவர் காணவில்லை. கடந்த சில தினங்களாகவே மாவட்டம் முழுவதும் இந்த சம்பவம் அதிகரித்துள்ளது.
Similar News
News November 7, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.06) இரவு 10 மணி முதல் இன்று (நவ.07) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 6, 2025
வயலோகத்தில் பொது இடத்தில் மது அருந்திய இருவர் மீது வழக்கு

அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் முத்துமாரியம்மன் கோவில் நாடகமேடை மற்றும் வயலோகம் பேருந்து நிறுத்த பகுதியில் அன்னவாசல் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் துரைராஜ் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த குடுமியான்மலை பகுதியை சேர்ந்த ரெங்கசாமி (25), பாண்டியராஜன் (25) ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 6, 2025
புதுகை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

பெரம்பலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


