News September 15, 2024

திருவண்ணாமலை ஆட்சியர் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு, தாட்கோ மூலம் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 21-36 வயதுக்குள் உள்ளவர்கள் தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். 100 மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சி, விடுதி வசதி, பயிற்சி செலவினம் தாட்கோவால் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 25, 2025

தி.மலை மக்களே இந்த நம்பர் உங்க கிட்ட இருக்கா?

image

அரசு மருத்துவ மனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<17511488>>தொடர்ச்சி<<>>

News August 25, 2025

புகார் எண் 104ன் சேவைகள்

image

104 எண் மூலம் தரமற்ற சேவை தரும் மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், ஓட்டல்கள் பற்றியும் புகார் செய்யலாம். மேலும் உடல் நலம் சார்ந்த சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் இங்குள்ள மருத்துவர்களை தொடர்பு கொண்டு பேசலாம். மருத்துவத்துறையில் மகப்பேறு, இருதயம், நீரிழிவு, காது மூக்கு தொண்டை, குடல்இறப்பை, தோல் மருத்துவபிரிவுகளைச் சேர்ந்த 20 மருத்துவ நிபுணர்கள் 24 மணிநேரமும் தயார் நிலையில் இருப்பார்கள். ஷேர் பண்ணுங்க

News August 25, 2025

தி.மலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தி.மலை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மையம் இணைந்து, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 29 காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேலைவாய்ப்பு மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. 8ம் வகுப்பு முதல் உயர் கல்வி முடித்தவர்கள் கல்விச்சான்றுகள், ஆதார், ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

error: Content is protected !!