News September 14, 2024

தென்காசி: சைபர் கிரைம் குறித்து காவல்துறை அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது பல்வேறு வலைதளங்களில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன; சைபர் குற்றவாளிகளால் நீங்கள் ஏமாற்றப்பட்டால், உடனடியாக 1930 என்று எண்ணை தொடர்பு கொள்ளவும்; அல்லது <>https://www.cybercrime.gov.in/<<>> என்ற இணைய முகவரியில் புகார் செய்யலாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News January 9, 2026

தென்காசி பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி – APPLY!

image

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் மத்திய அரசு அங்கிகரிக்கப்பட்ட இலவச தையல் பயிற்சி மையம் ஸ்ரீ பவானி தையல் பயிற்சி மையத்தில் பேட்ச் வாரியாக வகுப்பு தொடங்கப்படுகிறது. இதில் 18 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் மட்டும் அனுமதி. பயிற்சி காலம் முடிந்தபின் மாணவிகளுக்கு மத்திய அரசால் தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். தொடர்புக்கு: 6385380815, 9445793675 இந்த எண்களில் அழைத்து பயன் பெறலாம். SHARE IT

News January 9, 2026

தென்காசியில் 35 கிராம் தங்கசெயின் பறித்தவர் கைது

image

தென்காசி, பாவூர்சத்திரம் ரயில் நிலையம் 1வது நடைமேடையில் நடந்து சென்ற பாவூர்சத்திரம் தெற்கு காந்தி நகரை சேர்ந்த ரத்தினசாமி மனைவி தனபாக்கியம் என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 35 கிராம் தங்கச் முறுக்கு செயினை பறித்து சென்றனர். செயின் பறித்து தலைமறைவாக இருந்த பாவூர்சத்திரம் சின்னத்தம்பி நாடார் பட்டியை சேர்ந்த சிவா என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்து தங்கச் செயினை பறிமுதல் செய்தனர்.

News January 9, 2026

தென்காசி மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

தென்காசி மாவட்டத்தில் போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க தென்காசி மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புகையில்லா போகி கொண்டாடுவோம் சுற்றுச் சூழலை பேணிக் காப்போம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!