News September 14, 2024
மக்கள் நீதிமன்றத்தில் 3512 வழக்குகள் முடித்து வைப்பு

நெல்லை, தென்காசி மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நீதிமன்றங்களில் நடைபெற்றது. இதில் 6807 வழக்குகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 3512 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.23 கோடியே 30 லட்சத்து 89 ஆயிரத்து 853 சமரசத் தொகைக்கு முடிக்கப்பட்டது. வரா கடன் வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணி ஆனை குழு செயலாளர் சார்பு நீதிபதி இசக்கியப்பன் செய்திருந்தார்.
Similar News
News November 15, 2025
நெல்லை: 10th முடித்தால் அரசுப் பள்ளியில் வேலை உறுதி!

நெல்லை மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச.4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
News November 15, 2025
நெல்லை: மகனை இழந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

களக்காடு அருகே சவளைக்காரன் குளத்தைச் சேர்ந்த ஆறுமுகப்பெருமாள் மகன் அபின் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் ஆறுமுக பெருமாள் மன வேதனையுடன் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் சவளைக்காரன் குளம் இடுகாட்டில் உள்ள தனது மகனின் கல்லறையில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
News November 15, 2025
நெல்லை: பதக்கங்களை குவித்த அரசுப் பள்ளி மாணவன்

மாநில அளவிலான வில்வித்தை போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற நெல்லை, வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஊ.லெபின் சுதர்ஷன் மாநில அளவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றார். அவரை தலைமை ஆசிரியர் டேனியல் கிப்சன், பொறுப்பாசிரியர் இராஜேஷ்வரி. வகுப்பு ஆசிரியர் தியாகராஜன் ஆகியோர் பாராட்டினார்கள்.


