News September 14, 2024
திருப்பூரில் இன்றைய தலைப்பு செய்திகள்

➤ காங்கேயத்தில் விவசாய கிணற்றில் விழுந்ததில் மொத்தமாக 16 ஆடுகள் உயிரிழந்தது. ➤ பல்லடத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற நபரின் விரலை உடைத்து விட்டதாக மனித உரிமை கவுன்சிலிடம் புகார் அளித்துள்ளனர். ➤ பல்லடம் அருகே பூமலூரில் காளை மாடு முட்டியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். ➤ ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து மல்லிகை பூ ரூ.500-ல் இருந்து ரூ.2,000 விற்பனை.
Similar News
News August 10, 2025
திருப்பூரில் அரசு வேலை நாளையே கடைசி நாள்!

திருப்பூர் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து நாளை ஆக.11 மாலை 5.00 மணிக்குள் திருப்பூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பம் மற்றும் விபரங்களுக்கு <
News August 10, 2025
திருப்பூர்: ஜிகே வாசன் குற்றச்சாட்டு!

குண்டடம் பகுதியில் இன்று வருகை புரிந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மடத்துக்குளம் பகுதியில் காவலர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் மற்றும் தாராபுரம் பகுதியில் வக்கீல் படுகொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். மேலும் இந்த ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
News August 10, 2025
தாராபுரம் பகுதிக்கு ஜி.கே வாசன் வருகை

தாராபுரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ரத்தினசபாபாதி, கடந்த 1 மாதத்திற்கு உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்.பியுமான ஜி.கே வாசன், அவரது விட்டிற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகச்சில் தமிழ் மாநில கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.