News September 14, 2024

சேலத்தில் 35,909 பேர் தேர்வை எழுதினர்

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வினை சேலம் மாவட்டத்தில் 46,856 தேர்வர்கள் எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 35,909 தேர்வர்கள் தேர்விற்கு வருகை புரிந்திருந்தனர். சேலம், ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, வாழப்பாடி ஆகிய தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 162 தேர்வுக் கூடங்களில் இத்தேர்வு நடைபெற்றது.

Similar News

News July 8, 2025

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, கோவை-தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (03680) கோவை ரயில் நிலையத்தில் இருந்து இன்று (ஜூலை 08) காலை 07.50 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் சுமார் 11.10 மணி நேரம் தாமதமாக இரவு 07.00 மணிக்கு புறப்படும். திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News July 8, 2025

பெண்கள் சேவை மையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

image

ஆத்தூர் சகி பெண்கள் சேவை மையத்தில் வேலைக்கு 8ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள நபர்கள் 15.07.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம். அறை எண் 126 என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0427-2413213 அழைக்கவும் என கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.SHAREit

News July 8, 2025

சேலத்தில் வேலை: பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க!

image

ஆத்தூர் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு காலியாக உள்ள மைய நிர்வாகி , தொழில்நுட்ப வல்லுநர், பல்நோக்கு உதவியாளர்,காவலர் உள்ளிட்ட தற்காலிக பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சேலத்தை சேர்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது 0427-2413213அழைக்கவும்.SHAREit(<<16989627>>தொடர்ச்சி<<>>)

error: Content is protected !!