News September 14, 2024
தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி: ஆட்சியர் பார்வை

கரூர் காக்காவாடி வேலம்மாள் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மையத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் உதவியாளருடன் தேர்வு எழுதினர். இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News November 8, 2025
கரூர் சம்பவம்: 8 பேருக்கு முன்ஜாமீன்

கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சார நிகழ்ச்சியின் போது, நெரிசலில் சிக்கியவர்களை அழைத்து சென்ற அவசர ஊர்தி ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவசர ஊர்தி ஓட்டுநர்கள், 8 பேர் மீது புகார் அளித்து இருந்தனர். இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஸ்ரீமதி, விசாரணைக்கு முழுமையான ஒத்துழைக்க வேண்டும் என 8 பேருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கினார்.
News November 8, 2025
108 ஆம்புலன்ஸ் மோதி நடந்த சென்ற மூதாட்டி பலத்த காயம்

கரூர் சேமாங்கி பகுதியைச் சேர்ந்தவர் இளஞ்சியம் 64. இவர் நேற்று கரூர் மனோகரா கார்னர் சாலையில் நடந்து சென்ற போது மனோஜ் குமார் ஓட்டி வந்த 108 ஆம்புலன்ஸ் மோதியதில் இளஞ்சியம் படுகாயம் அடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரின் மகள் புனிதா புகாரில் கரூர் நகர போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 8, 2025
அறிவித்தார் கரூர் கலெக்டர்

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் -2025 (TET-I, TET-II) ஆசிரியர் தகுதித் தேர்விற்கான மண்டல அளவிலான மாதிரி தேர்வு இன்று 08.11.2025 நடைபெறவுள்ளது என கலெக்டர் மீ.தங்கவேல் கூறியுள்ளார்.(https://www.trb.tn.gov.in) மேலும் இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.


