News September 14, 2024

UPI பயனர்களுக்கு ஓர் நற்செய்தி

image

ஒரு குறிப்பிட்ட UPI பரிவர்த்தனைக்கு ஒரே நேரத்தில் ₹5 லட்சம் வரை பணம் செலுத்தும் வசதி நாளை (செப்.15) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. நிதிக் கொள்கை மறுஆய்வில் RBI எடுத்த இம்முடிவை அடுத்து, நாட்டில் UPI செயல்பாடுகளை நிர்வகிக்கும் NPCI பரிவர்த்தனை வரம்புகளை அதிகரித்துள்ளது. IT வரி, மருத்துவம் & கல்வி கட்டணங்கள், IPO, அரசுப் பத்திரங்கள் போன்றவற்றுக்கு UPI மூலம் இனி ₹5 லட்சம் வரை
செலுத்த முடியும்.

Similar News

News October 19, 2025

மதியத்திற்கு மேல்… வந்தது புதிய எச்சரிக்கை

image

30 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, கரூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை, திருப்பூர், கோவை, தேனி, மதுரை, திண்டுக்கல்லில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

News October 19, 2025

Women’s WC: இந்திய அணி பவுலிங்

image

மகளிர் உலக கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பவுலிங் செய்யவுள்ளது. கடந்த 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இந்தியா, அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்த இப்போட்டியில் வெல்வது அவசியமாகும். நடப்பு தொடரில் தோல்வியே தழுவாத இங்கிலாந்து, இந்தியாவை வீழ்த்தும் பட்சத்தில் அரையிறுதிக்கு 3-வது அணியாக முன்னேறும். இந்திய அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பதில் ரேணுகா சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

News October 19, 2025

IRCTC-ல் டிக்கெட் புக் செய்பவர்களின் கவனத்திற்கு!

image

பண்டிகை காலத்தில் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் டிக்கெட் புக் செய்வதால் சில நேரங்களில் IRCTC-யின் சர்வர் டவுன் ஆகிவிடுகிறது. இதனால் சில சமயங்களில் டிக்கெட் புக் ஆகாமல் பணம் டெபிட் ஆகிவிடுகிறது. இதற்கான ரீஃபண்ட் 3 நாட்களுக்குள் உங்கள் வங்கிக்கு வரவேண்டும். அப்படி வரவில்லை எனில், care@irctc.co.in என்ற மின்னஞ்சலுக்கு புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!