News September 14, 2024

திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடத்த வாய்ப்புள்ளது

image

சென்னயில் பேட்டியளித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பிரபாகர், “சென்னை எழும்பூர் பிரசிடென்சி பள்ளியில் 300 பேருக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதில் 242 பேர் வந்துள்ளனர், ஒரு பார்வை குறைபாடு உடைய மாணவர் scribe தேர்வு எழுதி வருகிறார். 61 பணிகள் குரூப் 2 தேர்வில் உள்ளது. திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடத்த வாய்ப்புள்ளதாகவும் இந்தாண்டு இதுவரை 10,315 வேலைவாய்ப்பு உள்ளது” என்றார்.

Similar News

News December 26, 2025

சென்னை: வீடு புகுந்து தாய்-மகனுக்கு வெட்டு!

image

சென்னை வியாசர்பாடியில் எஸ்.ஏ. காலனியைச் சேர்ந்த சூர்யா (19) என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் கத்தியால் தாக்கியது. இந்த சம்பவத்தின் போது மகனைத் தடுக்க முயன்ற தாய் சாந்திக்கும் வெட்டு விழுந்தது. காயமடைந்த இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

News December 26, 2025

கடும் பனிமூட்டம்: சென்னையில் ரயில் சேவை பாதிப்பு

image

சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்கள் சற்று தாமதமாக வருகிறது. குறிப்பாக, மங்களூரு விரைவு ரயில், அசோகபுரம் காவிரி விரைவு ரயில் காலதாமதமாக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. அதேபோல, பல்வேறு பகுதிகளில் இருந்து சென்ட்ரல் வரவேண்டிய புறநகர் ரயில்களும் 15 நிமிடம் தாமதமாக வருகிறது.

News December 26, 2025

சென்னை: தோஷம் என்ற பெயரில் தங்க நகை திருட்டு

image

சென்னை சவுகார்பேட்டை மிண்ட் தெருவைச் சேர்ந்த தீபக் ஜெயின் (29) மீது நேற்று அடையாளம் தெரியாத இருவர், தோஷம் இருப்பதாக கூறி வசியப்படுத்தி தங்க வளையல்களை திருடிச் சென்றனர். மந்திரம் சொல்லுவது போல் கையை பிடித்து, பேப்பரில் சுற்றி பையில் வைக்கச் சொல்லியபோது, 10 சவரன் வளையல்கள் பறிக்கப்பட்டன. மயக்கம் தெளிந்தபின் திருட்டு தெரியவந்தது. புகாரின் பேரில் கொத்தவால்சாவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!