News September 14, 2024
நன்னிலம் அருகே கடனை திருப்பி கொடுக்க முடியாததால் தற்கொலை

நன்னிலம் அருகே ஆலங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன் (30). கூலி தொழி–லாளி. மணிகண்டன் மகளிர் குழுவில் மனைவியின் பெயரில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாததால் மணிகண்டன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நன்னிலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News July 11, 2025
திருவாரூர்: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடனுதவி

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கவும், மேலும் தகவல்களுக்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். SHARE செய்ங்க புதிய தொழில் தொடங்குங்க.
News July 11, 2025
திருவாரூர்: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

➡️ தமிழகத்தில் நாளை 13.8 லட்சம் பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்வது கட்டாயம்
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை
➡️ இதனை தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு SHARE செய்யவும்!
News July 11, 2025
நெல் ஜெயராமனுக்கு சிலை; முதல்வர் அறிவிப்பு!

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் எஸ் எஸ் நகரில் இன்று (ஜூலை 10) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தமிழக முதலவர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். அப்போது உலகப் புகழ்பெற்ற திருத்துறைப்பூண்டி தேசிய நெல் திருவிழா மூலம் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் அவர்களுக்கு, திருத்துறைப்பூண்டியில் ஆள் உயர சிலை அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.