News September 14, 2024

நாகை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு

image

வங்கதேசத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் மேற்கு வங்கம் வழியாக அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகரக்கூடும். மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் வங்கதேச கடற்கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் தொலைதூரத்தில் புயல் உருவாகியுள்ளது என்பதை குறிக்கும் நாகை, காரைக்கால் உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Similar News

News December 24, 2025

நாகை: இலவச எம்பிராய்டரி பயிற்சி அறிவிப்பு

image

நாகை புதிய கடற்கரை சாலை ஐ.ஓ.பி. ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், 30 நாட்கள் இலவச எம்பிராய்டரி, பேப்ரிக் பெயிண்டிங், ஆரி ஒர்க் ,பிளவுஸ் டிசைனிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், நாகை மாவட்டத்தை சேர்ந்த 8-ம் வகுப்பிற்கு மேல் படித்த 50 வயதுகுட்பட்டவர்கள் 6374005365 / 9047710810 என்ற எண்ணில் முன்பதிவு செய்து பங்கேற்கலாம் என பயிற்சி மைய இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

News December 24, 2025

நாகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

நாகை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 24, 2025

நாகையில் 10 பெண்கள் உள்பட 48 பேர் கைது!

image

தொழிலாளர்ளுக்கு விரோதமாக இருப்பதாக கூறி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளர் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று நாகை நீதிமன்றம் அருகே சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக 10 பெண்கள் உள்பட 48 பேரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

error: Content is protected !!