News September 14, 2024
புதுக்கோட்டை அருகே பாம்பு கடித்து இளைஞர் உயிரிழப்பு

கீரமங்கலம் அடுத்த பாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் அஜித் இன்ஜினியரிங் படித்துள்ளார். அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது துரதிஷ்டவசமாக பாம்பு கடித்ததில் இறந்து போனார். இது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில் கீரமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 24 வயது இளைஞன் பாம்பு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News December 2, 2025
புதுக்கோட்டை: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

புதுகை மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 2, 2025
புதுகை: பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் கைது

அறந்தாங்கியில் உள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் (பொ) மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் 2 பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து புரோக்கர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 2, 2025
புதுக்கோட்டை: விவசாயி எடுத்த விபரீத முடிவு

ஆலங்குடி அருகே பனங்குளம் வடக்கு கிராமத்தை சேர்ந்த களப்பையா (49). விவசாயியான இவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள எலுமிச்சை தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அறந்தாங்கி GHக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


