News September 14, 2024
தூத்துக்குடியில் வருவாய் ஆய்வாளர்கள் மாற்றம்

தூத்துக்குடி மாநகராட்சியில் அனைத்து துறை அதிகாரிகளும் அலுவலர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் இரண்டாவது சிறந்த மாநகராட்சியாக விருது பெற்றுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில், முதுநிலை வருவாய் அலகில் உள்ள ஆய்வாளர்கள் 24 பேருக்கு பணி நியமனம் மற்றும் பணி மாறுதல் செய்து தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவர் அஜய் சீனிவாசன் நேற்று(செப்.13) உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 5, 2025
தூத்துக்குடி: தலைமை செயலகத்தில் வேலை

தமிழ்நாடு தலைமை செயலகம் மற்றும் நிதி பிரிவில் காலியாக உள்ள உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 32 காலிப்பணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் <
News November 5, 2025
கோவில்பட்டி சுந்தர்ராஜப்பெருமாள் கோவில் திருக்கல்யாணம்

கோவில்பட்டி ஸ்ரீ தேவி – நீலாதேவி உடனுறை அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. திருக்கல்யாண விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அலங்காரமும், அதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி நீலாதேவி உடனுறை சுந்தரராஜப்பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
News November 5, 2025
தூத்துக்குடி: அத்துமீற முயன்றவருக்கு தர்ம அடி

தெய்வச் செயல்புரத்தைச் சேர்ந்த முருகன் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இவர் அப்பகுதியில் விவசாய கூலி வேலை செய்துவிட்டு வந்த பெண்னிடம் அத்துமீற முயன்றுள்ளார். அப்போது அப்பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் முருகனுக்கு தர்ம அடி கொடுத்த நிலையில் இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


