News September 14, 2024

கிருஷ்ணகிரியில் 30-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி

image

கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள அரசு ஆடவர் கலை கல்லூரியில் 30-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். கோபிநாத் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் டி.மதியழகன், டி.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக உணவுத்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

Similar News

News July 6, 2025

162 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் துவக்கி வைத்தார். அதில் பணிப்பெற்ற 162 மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

News July 6, 2025

கிருஷ்ணகிரி: மீட்புப் பணிகள் குறித்த விழிப்புணர்வு

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக, தென்மேற்குப் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களை முன்னிட்டு, தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் துவக்கி வைத்து, பார்வையிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் உள்ளிட்டோர் இருந்தனர்.

News July 5, 2025

இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜூலை.05) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!