News September 14, 2024
கள்ளக்குறிச்சி ஆட்சியர் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதியன்று மிலாடி நபியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான டாஸ்மார்க், மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். உத்தரவை மீறி மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 9, 2025
கள்ளக்குறிச்சி: கடையில் அதிக விலையா..? உடனே புகார்!

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் அத்தியாவசியப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள், ஆட்டோமொபைல்கள் என 375 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி விகிதங்கள் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் குறைந்துள்ளது. இருப்பினும் பழைய விலைக்கே விற்பனை செய்கிறார்கள் என்றால் 1800-11-4000 அல்லது 1915 என்ற எண்ணிலோ https://consumerhelpline.gov.in என்ற இணையதளத்திலோ புகார் அளிக்கலாம்.(SHARE IT)
News November 9, 2025
கள்ளக்குறிச்சி: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம்.
1.முதலில் <
2.அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
3.அதில், முகவரி இடத்தில் உங்களது புதிய முகவரியை பதிவிடவும்.
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்.
5.பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம்.
News November 9, 2025
கள்ளக்குறிச்சி: மின்சாரம் தாக்கி இருவர் பலி!

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் பகுதியில் உள்ள வாட்டர் வாஷ் நிலையத்தில் பணியாற்றி கொண்டிருந்த தென் கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த், கரீம்ஷா தக்காவை சேர்ந்த ஷாகில் ஆகிய இரண்டு இளைஞர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.


