News September 14, 2024

போக்சோ வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது

image

சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நாகராஜ் 41. இவர் சேத்துப்பட்டு பகுதியில் பள்ளி மாணவர்களை ஆட்டோவில் அழைத்து சென்றபோது 9ஆம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார். போளூர் மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் இன்று இன்ஸ்பெக்டர் அல்லி ராணி ஆட்டோ ஓட்டுனர் நாகராஜன் போக்சோ வழக்கில் கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News August 25, 2025

தி.மலை மக்களே இந்த நம்பர் உங்க கிட்ட இருக்கா?

image

அரசு மருத்துவ மனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<17511488>>தொடர்ச்சி<<>>

News August 25, 2025

புகார் எண் 104ன் சேவைகள்

image

104 எண் மூலம் தரமற்ற சேவை தரும் மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், ஓட்டல்கள் பற்றியும் புகார் செய்யலாம். மேலும் உடல் நலம் சார்ந்த சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் இங்குள்ள மருத்துவர்களை தொடர்பு கொண்டு பேசலாம். மருத்துவத்துறையில் மகப்பேறு, இருதயம், நீரிழிவு, காது மூக்கு தொண்டை, குடல்இறப்பை, தோல் மருத்துவபிரிவுகளைச் சேர்ந்த 20 மருத்துவ நிபுணர்கள் 24 மணிநேரமும் தயார் நிலையில் இருப்பார்கள். ஷேர் பண்ணுங்க

News August 25, 2025

தி.மலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தி.மலை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மையம் இணைந்து, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 29 காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேலைவாய்ப்பு மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. 8ம் வகுப்பு முதல் உயர் கல்வி முடித்தவர்கள் கல்விச்சான்றுகள், ஆதார், ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

error: Content is protected !!