News September 14, 2024

சிறுமியிடம் சில்மிஷம்: அடித்தே கொன்ற குடும்பத்தினர்

image

பீகாரில் இருந்து டெல்லி செல்லும் ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 வயது சிறுமியிடம் இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை அந்த சிறுமி, பெற்றோரிடம் கூறவே, அவர்களும், மற்ற பயணிகளும் சேர்ந்து அந்த இளைஞரை கடுமையாக தாக்கினர். பின்னர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர், சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். விசாரணையில், அவர் பீகாரை சேர்ந்த ரயில்வே ஊழியர் பிரசாந்த் குமார் (34) என்பது தெரியவந்தது.

Similar News

News October 19, 2025

Sports Roundup: பேட்மிண்டனில் இந்திய இணை அசத்தல்

image

*Women’s WC-ல் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்து. *Women’s WC அரையிறுதிக்கு 2-வது அணியாக தென்னாப்பிரிக்கா தகுதி. *வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ODI-ல் வங்கதேசம் 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. *பேட்மிண்டன் தரவரிசையில் சாத்விக், சிராக் இணை 3-வது இடத்திற்கு முன்னேற்றம். * புரோ கபடியில் தெலுகு டைட்டன்ஸ் 40-31 என்ற புள்ளிகள் கணக்கில் புனேரி பல்தான்ஸை வீழ்த்தியது.

News October 19, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News October 19, 2025

அப்பாவு பேரவை மரபுகளை மீறுகிறார்: அன்புமணி

image

புதிய சட்டமன்ற குழு நிர்வாகிகளை ஏற்க சபாநாயகர் அப்பாவு மறுப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என அன்புமணி சாடியுள்ளார். 24 உறுப்பினர்களை (மொத்த உறுப்பினர்களில் 10%) கொண்ட கட்சிகளை மட்டுமே பேரவையில் அங்கீகரிக்க முடியும் என்று, அரசியலுக்கு ஏற்ப விதிகளை மாற்றுவதாகவும் விமர்சித்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சியாக அங்கீகாரம் செய்வதற்கு மட்டுமே 10% உறுப்பினர்கள் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

error: Content is protected !!