News September 14, 2024
முதல்வரை வரவேற்க உள்ள அமைச்சர்

முதலீட்டாளர்கள் சந்திப்பை முடித்துவிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று இந்தியா திரும்புகிறார். இந்நிலையில், அவரை வரவேற்கும் விதமாக இன்று காலை 7 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட உள்ளது. இதில், பல்வேறு துறையினர் மற்றும் திமுகவினர் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News September 17, 2025
ஸ்ரீபெரும்புதூருக்கு புதிய ரயில்பாதை திட்டம்!

ஆவடியிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக கூடுவாஞ்சேரி வரை 58 கி.மீ தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் ரூ.3,136 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக 234 பக்க திட்ட அறிக்கை தயாராகியுள்ளது. இதனால் தண்டலம், ஸ்ரீபெரும்புதுார், வல்லக்கோட்டை, ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்றுவருவோர் பயன்பெறுவர். இந்த திட்டம் இன்னும் 5 ஆண்டுகளில் நிறைவுபெறவுள்ளது.
News September 17, 2025
காஞ்சிபுரம்: 10th போதும், மத்திய அரசு வேலை!

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு,
▶️கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
▶️சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100
▶️வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு)
கடைசி தேதி: செப்டம்பர் 28
<
News September 17, 2025
காஞ்சிபுரம்: செல்வம் செழிக்க புரட்டாசியில் இங்கு போங்க!

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் அமைந்துள்ள திருஊரகப்பெருமாள் திருக்கோயில், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது. இங்கு அருள்பாலிக்கும் திருஊரகப்பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் மனமுருகி வழிபட்டால், கடன் தொல்லை நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பணக்கஷ்டத்திலும், கடனிலும் வாடும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!