News September 14, 2024
மாமியாரை கொல்ல முயற்சி: 7 ஆண்டுகள் சிறை

சேலையூர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார்(42) என்பவர், கடந்த 2017ஆம் ஆண்டு தனது மாமியார் கௌசல்யா என்பவரை கொலை முயற்சி செய்ததாக, சேலையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி அசோக்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Similar News
News November 2, 2025
செங்கை: மின்சாரம் பாய்ந்து தொழிலாளர்கள் பலி!

மதுராந்தகம் அருகே சோத்துப்பாக்கத்தில் திருமண மண்டபத்தில் கடந்த அக்.31-ல் இரும்பு தகடு பொருத்தும் பணி நடைபெற்றது. இதில், ஆந்திராவைச் சேர்ந்த ரமணா (56) (ம) சாந்தாராவ் (45) ஆகியோர் உயர் மின் அழுத்த மின்கம்பத்தில் இருந்து சென்ற மின் ஒயரை கவனிக்காமல் இரும்பு பைப் கொண்டு வேலை செய்த போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 2, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு நேற்று (நவ.01) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 1, 2025
செங்கல்பட்டு காவல்துறை அறிவுரை

செங்கல்பட்டு காவல் துறை வலைத்தளத்தில் விழப்புணர்வு போஸ்டர் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 1. சாலையில் நடந்து செல்லும்போது கைபேசியை பயன்படுத்தாதீர், 2. குழந்தைகளின் மேல் அதிக கவனம் செலுத்துங்கள், 3. வலது மற்றும் இடது பக்கம் பார்த்து சாலையை பாதுகாப்பாக கடப்பீர் என்றும் அறிவுரை வழங்கப்பட்டதுள்ளது. இந்த சின்ன சின்ன விதியை கடைபிடித்து விபத்தில் இருந்து நம்மை பாதுகாப்போம். ஷேர் பண்ணுங்க.


