News September 13, 2024
அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக உத்தரவு

முறைகேடு வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டு மனைகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக பெரியசாமி உட்பட 7 பேர் மீது 2013ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில், பெரியசாமியை தவிர்த்து மற்ற அனைவர் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் செப்.30ம் தேதி அவர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
கோவையில் பெண் கடத்தல் விவகாரத்தில் புது ட்விஸ்ட்

கோவையில் பெண் கடத்தப்பட்டதாக வெளியான சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தான் கடத்தப்படவில்லை என்று அந்த பெண் கொடுத்த விளக்கத்தை, போலீஸ் வீடியோவாக பகிர்ந்துள்ளது. அதில் தனது கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனால் கோபித்துக்கொண்டு சென்றபோது அவர் கையை பிடித்து காரில் ஏற்றியதாகவும் கூறியுள்ளார். காரில் அவர் தன்னை அடித்ததாகவும், பதிலுக்கு தானும் அடித்தேன் என்றும் விளக்கமளித்துள்ளார்.
News November 7, 2025
அதிமுக + விஜய் கூட்டணி… முடிவை அறிவித்தார்

விஜய்யுடன் கூட்டணி அமைப்பதில் அதிமுக உறுதியாக இருப்பதை RB உதயகுமார் மீண்டும் பதிவு செய்துள்ளார். எல்லா கட்சிகளும் அறிவிப்பது போல தவெகவும் CM வேட்பாளரை அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மெகா கூட்டணியை EPS அமைப்பார் எனத் தெரிவித்துள்ளார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் RB உதயகுமார் சூசகமாக தெரிவித்துள்ளார். அதிமுகவின் மெகா கூட்டணியில் தவெக இடம்பெறுமா?
News November 7, 2025
அதுல்யா அணிந்தால் இலைகளும் மலரும்..!

‘காதல் கண் கட்டுதே’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை அதுல்யா ரவி, தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். SM-யில் மிகவும் ஆக்டிவாக இருப்பதன் மூலம், அதுல்யாவுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் சமீபத்தில், இன்ஸ்டாவில் வெளியிட்ட போட்டோஸ், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில், இலைகளை போர்த்திய பச்சை வண்ணமாய் மின்னுகிறார். உங்களுக்கும் இந்த போட்டோஸ் பிடிச்சிருந்தா, லைக் போடுங்க.


