News September 13, 2024
அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக உத்தரவு

முறைகேடு வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டு மனைகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக பெரியசாமி உட்பட 7 பேர் மீது 2013ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில், பெரியசாமியை தவிர்த்து மற்ற அனைவர் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் செப்.30ம் தேதி அவர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
F16 விமானங்கள் அழிப்பு: அமைதி காக்கும் அமெரிக்கா

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அமெரிக்க தயாரிப்பான F16 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியானது. அண்மையில் NDTV இதுபற்றி கேள்வியெழுப்ப, பாகிஸ்தானிடம் கேட்டு சொல்வதாக அமெரிக்க தரப்பு பதிலளித்துள்ளது. பாக்.கின் F16 விமானங்களை பராமரிப்பதே அமெரிக்கா தான். அதன் அனுமதியில்லாமல் அவற்றை பயன்படுத்தவும் முடியாது. அப்படியிருக்க, கேட்டு சொல்கிறோம் என்றால் என்ன அர்த்தம்?
News August 14, 2025
நீட் கவுன்சலிங் பட்டியல் வெளியானது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் (UG) முதல்கட்ட கவுன்சலிங் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சிபெற்ற மாணவர்கள், அந்தந்த கல்லூரிகளை வரும் 14-ம் தேதி முதல் 18-ம் தேதிக்குள் அணுக மருத்துவ கவுன்சலிங் கமிட்டி (MCC) அறிவுறுத்தியுள்ளது. ஒதுக்கீடு கடிதங்களை MCC இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். சீட் ஒதுக்கீடு பட்டியலை காண <
News August 14, 2025
தேர்தல் ஆணையத்தின் வரலாறும், செயல்பாடுகளும்

பிஹார் சிறப்பு வாக்காளர் திருத்தம், அரசியல் ரீதியாக நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது? அதன் அதிகாரிகளாக யார் இருப்பர்? அவர்களின் பொறுப்புகள் என்னென்ன? வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்பவர்கள் யார் என்பது குறித்து மேலே உள்ள படங்களை Swipe செய்து அறிந்துகொள்ளுங்கள். Share செய்யுங்கள்.