News September 13, 2024
சிறப்பு மருத்துவ முகாமில் 248 கோரிக்கை மனுக்கள்

தி.மலை கலெக்டர் அலுவலக அலுவலக வளாகத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கேட்டு 248 பேர் மனு அளித்தனர். இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் மாவட்ட மறுவாழ்வு அலுவலர் செந்தில்குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 25, 2025
தி.மலை மக்களே இந்த நம்பர் உங்க கிட்ட இருக்கா?

அரசு மருத்துவ மனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<17511488>>தொடர்ச்சி<<>>
News August 25, 2025
புகார் எண் 104ன் சேவைகள்

104 எண் மூலம் தரமற்ற சேவை தரும் மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், ஓட்டல்கள் பற்றியும் புகார் செய்யலாம். மேலும் உடல் நலம் சார்ந்த சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் இங்குள்ள மருத்துவர்களை தொடர்பு கொண்டு பேசலாம். மருத்துவத்துறையில் மகப்பேறு, இருதயம், நீரிழிவு, காது மூக்கு தொண்டை, குடல்இறப்பை, தோல் மருத்துவபிரிவுகளைச் சேர்ந்த 20 மருத்துவ நிபுணர்கள் 24 மணிநேரமும் தயார் நிலையில் இருப்பார்கள். ஷேர் பண்ணுங்க
News August 25, 2025
தி.மலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தி.மலை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மையம் இணைந்து, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 29 காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேலைவாய்ப்பு மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. 8ம் வகுப்பு முதல் உயர் கல்வி முடித்தவர்கள் கல்விச்சான்றுகள், ஆதார், ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.