News September 13, 2024
பெண்களின் புகாரளிக்கும் உரிமை

பெண்கள் பாலியல் மற்றும் குடும்ப வன்முறை குறித்து புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு நேராக செல்ல வேண்டியதில்லை. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005-ன்படி, பெண்கள் காவல்நிலையத்திற்கு செல்லாமலேயே புகாரளிக்க முடியும். இமெயில் மூலமாகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட முகவரியிலிருந்து எழுத்து மூலமாகவோ காவல்நிலைய முகவரிக்கு புகார்களைத் தெரிவிக்கலாம்.
Similar News
News October 31, 2025
வில்லியம் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்

*கண்கள், உங்கள் ஆன்மாவுக்கு ஜன்னல்.
*அனைவரையும் நேசியுங்கள், ஒரு சிலரை நம்புங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்.
*எதுவுமே செய்யாமல் எதுவும் வருவதில்லை.
*புத்திசாலித்தனமாகவும் மெதுவாகவும் செல்லுங்கள். வேகமாகச் செல்பவர்கள் தடுமாறி விழுந்துவிடுவார்கள்.
*உங்கள் அன்பை அதை மதிக்காதவருக்காக வீணாக்காதீர்கள்.
*பலரிடம் கேளுங்கள், சிலரிடம் பேசுங்கள்.
News October 31, 2025
கொரோனாவை விட கொடுமையான காற்று மாசு

உலக அளவில் 2024-ம் ஆண்டில் மட்டும் காற்று மாசுபாட்டால் 81 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். குறிப்பாக, இந்தியாவிலும் பல உயிர்களை காற்று மாசு கொன்று வருவதாக AIIMS முன்னாள் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். கடந்த சில நாள்களாக டெல்லியில் காற்று தரக் குறியீடு மிகவும் மோசமானதாக செல்வதால், மக்கள் அவதியுற்றுள்ளனர்.
News October 31, 2025
அதானி, அம்பானிக்காக பாஜக செயல்படுகிறது: ராகுல் காந்தி

பிஹாரில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மோடி – ராகுல் காந்தி இடையே கடுமையான வார்த்தை போராகவும் மாறியுள்ளது. ஷேக்புராவில் பரப்புரை மேற்கொண்ட ராகுல், பிஹாரில் தொழில்களை தொடங்க பாஜக விரும்பவில்லை என்று குற்றஞ்சாட்டினார். ஏனென்றால், அதானி & அம்பானி போன்றோர் சீன பொருள்களை பிஹார் உள்பட இந்தியாவில் விற்பனை செய்ய பாஜகவினர் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


