News September 13, 2024
இரவோடு இரவாக கட்டடம் இடித்து அகற்றம்

கரூர் கணபதிபாளையத்தில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் புதிதாக 5 அடி அகலம், 5 அடி நீளம், சுமார் 12 அடி உயரத்திற்கு கோவில் போன்ற அமைப்புடன் கட்டுமான பணி நடைபெற்று வந்த நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், சாமானிய மக்கள் நலக்கட்சி உள்ளிட்ட சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிற்கிணங்க இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டது.
Similar News
News November 8, 2025
தோகைமலை அருகே அலப்பறை.. தட்டி தூக்கிய போலீஸ்

தோகைமலை அருகே ராமச்சந்திரன், பூவரசன் ஆகிய இருவரும் பொது மக்களுக்கு இடையூறாக மது அருந்திக்கொண்டு அலப்பறை செய்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் தோகைமலை போலீசார் நேரில் சென்று இருவர்களையும் மடக்கி பிடித்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
News November 8, 2025
கரூர்: வங்கியில் வேலை! விண்ணப்பிக்கவும்

கரூர் மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவை நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க nabfins.org/Careers/ என்ற முகவரியில் அணுகலாம். கடைசி தேதி 15.11.2025 ஆகும். (SHARE)
News November 8, 2025
கரூர்: B.E, B.Tech போதும் வேலை ரெடி

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://www.nsic.co.in/Careers/Index என்ற இணையத்தில் பார்க்கவும்.
7.(SHARE பண்ணுங்க)


