News September 13, 2024

திருவெறும்பூரில் வாலிபர் படுகொலை

image

திருவெறும்பூர் அடுத்த சர்க்கார் பாளையம் பனையக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சுந்தர் என்பவர் நேற்று இரவு உறவினர் வீட்டு மொட்டை மாடியில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதி மிகப் பரபரப்பாக காணப்படுகின்றது. மேலும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News March 1, 2026

திருச்சி: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

திருச்சி: திமுகவின் மாநில மாநாடு பணி தீவிரம்

image

திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் திமுகவின் 12வது மாநில மாநாடு மார்.9ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், மாநாட்டு திடலில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 1, 2026

திருச்சி: லஞ்சம் பெற்ற வழக்கில் மின் பொறியாளர் கைது

image

திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுப்பட்டி மின் பொறியாளர் ராஜு விவசாய நிலத்திற்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.3000 லஞ்சம் கேட்க, அதைக் கொடுக்க விரும்பாத, கோம்பையைச் சேர்ந்த முத்து என்பவர் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச கண்காணிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசாரிடம் புகார் கொடுத்த நிலையில், நேற்று ராஜு கையூட்டு பெற்ற போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!