News September 13, 2024
நீதிமன்றத்தில் அப்பாவு ஆஜர்

அவதூறு வழக்கு விசாரணைக்காக சபாநாயகர் அப்பாவு, சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக அப்பாவுக்கு எதிராக அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதன் வழக்கு விசாரணையில் ஆஜராகும்படி, அப்பாவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Similar News
News January 17, 2026
விஜய்க்கு மக்கள் ஆதரவு எவ்வளவு? காங்., ரகசிய சர்வே!

விஜய்க்கு மக்கள் செல்வாக்கு எவ்வளவு இருக்கிறது என காங்., ரகசிய சர்வே எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதில், 100-ல் 61 பேர் தவெகவிற்கும், 23 பேர் திமுக கூட்டணிக்கும், 15 பேர் அதிமுக கூட்டணிக்கும் வாக்களித்திருக்கிறார்களாம். மேலும், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்த பின் மீண்டும் சர்வே எடுத்தபோது, 71% வாக்குகள் தவெகவுக்கு வந்திருக்கிறதாம். காங்., கூட்டணி நிலைப்பாட்டில் இது தாக்கத்தை ஏற்படுத்துமா?
News January 17, 2026
நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்: EPS

MGR பிறந்தநாளான இன்று அதிமுக நிர்வாகிகள் அனைவரும் சபதம் எடுக்க EPS வலியுறுத்தியுள்ளார். ‘நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்’ என்ற MGR பாடலை மேற்கோள் காட்டி, அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, வரும் தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு தொண்டரும் கடுமையாக உழைக்க சபதம் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
News January 17, 2026
4 மாசத்துக்கு மோடி இப்படி தான் பேசுவார்: கார்த்தி சிதம்பரம்

PM மோடி வரும் 23-ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார். இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள MP கார்த்தி சிதம்பரம், ‘PM மோடி தமிழகம் வந்தாலே தமிழ் கலாசாரம் பிடிக்கும், இட்லி-தோசை தான் சாப்பிடுவேன், பாரதியார் கவிதை கேட்டால்தான் தூக்கமே வரும் என பேசுவார்’ என்று விமர்சித்துள்ளார். தான் திருக்குறளை கேட்காத நாளே இல்லையென மோடி இன்னும் 4 மாதத்துக்கு சொல்லுவார் எனவும் அவர் கிண்டல் செய்துள்ளார்.


