News September 13, 2024
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி நசீமாபானு முன்னிலையில் உதயகுமார் என்பவருக்கு எதிராக போக்சோ வழக்கு விசாரனைக்கு வந்தது. இதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தது நிரூபிக்கப்பட்டதால், உதயகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 200 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டப்பட்டது.
Similar News
News October 28, 2025
செங்கை: சாலை விபத்தில் ஒருவர் பலி!

செங்கல்பட்டு: பவுஞ்சூர் அடுத்த தட்டாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(63). இவர், தனது பைக்கில் கூவத்துாரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக கிளம்பினார். தட்டாம்பட்டு அருகே சென்ற போது, நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் படுகாயமடைந்தார். பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 28, 2025
செங்கல்பட்டு: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

செங்கல்பட்டு மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க
News October 28, 2025
செங்கல்பட்டு: IT/ டிகிரி முடித்தவர்களா நீங்கள்?

மத்திய அரசு உளவுத்துறையில் உள்ள 258 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. IT அல்லது டிகிரி முடிருந்திருந்து , 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ..44,900 – ரூ.1,42,400/- வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-16 க்குள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.


