News September 13, 2024
மீனவர்களுக்காக கொந்தளித்த ஜெயக்குமார்!

நாகை மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் இன்று கரை வந்து சேர்ந்தனர். இச்சம்பவம் குறித்து ஜெயக்குமார் வெளியிட்ட பதிவில், “மன்னராட்சிப் போல் மகன் கையில் தமிழ்நாட்டை கொடுத்து விட்டு அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்துள்ள பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு மீனவர் வேதனை புரியவில்லையா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
Similar News
News August 14, 2025
வைரமுத்து மீது நடவடிக்கை தேவை: அர்ஜுன் சம்பத்

சென்னையில் நடைபெற்ற கம்பன் விழாவில் ராமனை பைத்தியக்காரன் என வைரமுத்து இழிவுப்படுத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை கோரி தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளதாகவும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். ஆளுநரிடமிருந்து பட்டம் பெறுவதை தவிர்த்த மாணவி கிறிஸ்துவர் என்றும், ஆளுநரை உள்நோக்கத்துடன் அவர் அவமதித்துள்ளதால் அவரது பட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.
News August 14, 2025
ஆகஸ்ட் 14: வரலாற்றில் இன்று

1947 – பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் விடுதலை பெற்ற நாள்.
1911 – பிரபல ஆன்மிக தலைவர் வேதாத்திரி மகரிஷியின் பிறந்த தினம்.
2007 – ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் நடந்த 4 தொடர் குண்டுவெடிப்புகளில் 334 பேர் கொல்லப்பட்டனர்.
2016 – பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைந்த தினம்.
2018 – இத்தாலியில் உள்ள ஜெனோவா நகரில் பாலம் இடிந்து விழுந்ததில் 35 பேர் உயிரிழப்பு.
News August 14, 2025
அரசியல் எதிரிகள் பார்த்த வேலை: தங்கமணி வேதனை

முன்னாள் அமைச்சர் தங்கமணி திமுகவில் இணையப்போவதாக தகவல் பரவிய நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சை இருந்த போதும், திருச்சியில் இபிஎஸ் சுற்றுபயணத்துக்காக தான் கட்சிப்பணி மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். தன்னை குறித்து வந்த இச்செய்தியை எண்ணி மனவேதனைப்படுவதாகவும், அரசியல் எதிரிகளின் தவறான தகவல் செய்தியாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.