News September 13, 2024

ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

image

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மாதாந்திர குற்ற புலனாய்வு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்து பள்ளி, கல்லூரி பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்று போலீசாருக்கு, போலீஸ்சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி உத்தரவிட்டுள்ளார். மேலும், கஞ்சா உள்ளிட போதைப்பொருட்கள் விற்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.

Similar News

News October 30, 2025

திருத்தப் பணி மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம்

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் பணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா தலைமையில் இன்று (அக்.29) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News October 29, 2025

திருத்தப் பணி மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம்

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் பணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா தலைமையில் இன்று (அக்.29) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News October 29, 2025

கல்லூரி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து

image

வேலூரில் இருந்து திருத்தணிக்கு அரசு பேருந்து இன்று அக்.29ஆம் தேதி சென்று கொண்டிருந்தது பெருங்காஞ்சி ஏரிக்கரை பகுதியில் செல்லும் போது எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மீது அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் கல்லூரி பேருந்தில் முன்பக்க கண்ணாடி உடைந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!