News September 12, 2024

உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு நாளை பேரணி

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று இரவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை காலை மோகனூர் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து மாபெரும் பேரணி நடைபெற உள்ளதாக மேலும் இந்த பேரணியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News May 8, 2025

நாமக்கல் மாணவி அசத்தல்!

image

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே.8) வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவி கார்த்திகா, 598/600 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், பள்ளி ஆசிரியர்களும் மாணவிக்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

News May 8, 2025

மார்கழியில் மட்டுமே காட்சி தரும் மரகத லிங்கம்!

image

நாமக்கல்: திருச்செங்கோடு மலையின் மீது அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு மார்கழி மாதம் மட்டும் மரகத லிங்கம் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. மற்ற மாதங்களில் அதற்குப் பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து வழிபடுகிறார்கள். இந்த மரகத லிங்கத்தை தரிசனம் செய்ய காலை 5 மணிக்குள் கோவிலில் இருக்க வேண்டும். SHARE பண்ணுங்க!

News May 8, 2025

நாமக்கல்: 70 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 195 பள்ளிகள் உள்ளது. அதில் 12 அரசு பள்ளிகள் உட்பட 70 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் 9343 பேரில் 8672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை WAY2NEWSல் தொடர்ந்து பாருங்கள். (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!