News September 12, 2024
விஜய்யின் மாநாட்டுக்கு இடையூறு செய்யக் கூடாது – கிருஷ்ணசாமி

மதுரை வந்திருந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசியலுக்கு வரக் கூடாது என நடிகர் விஜய்யை தடுக்க முடியாது, விஜய்யை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் கைகளில் உள்ளது.
விஜய்யின் மாநாட்டுக்கு இடையூறு செய்யக் கூடாது, விஜய் மாநாட்டுக்கு கடும் கட்டுபாடுகளை விதிக்கக் கூடாது. விஜய் அரசியல் களத்திற்கு வரட்டும், அவரை நேரில் சந்திக்கலாம்” என்றார்.
Similar News
News September 18, 2025
மதுரை அருகே மின்னல் தாக்கி மாணவர் பலி

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா காளப்பன்பட்டி ராஜ்குமார் மகன் கவுதம் 18. இவர் கருமாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். மாலை கல்லூரி விட்டு வீடு திரும்புவதற்காக காளப்பன்பட்டி அருகே டூவீலரில் இவரது நண்பர் அருண்பாண்டியுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கி கவுதம் இறந்தார். அருண் பாண்டி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
News September 18, 2025
மதுரையில் இங்கெல்லாம் மின்தடை

மதுரையில் வளையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை,பாரபத்தி, சோளாங்கூரணி, நல்லூர்,குசவன்குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வளையப்பட்டி, ம ஒ.ஆலங்குளம், கொம்பாடி, உசிலம்பட்டி, வாலாந்தூர், நாட்டார்மங்கலம், தும்மக்குண்டு, சேடப்பட்டி, காலப்பன்பட்டி, பூசலாபுரம், தங்கலாச்சேரி, அழகுரெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
மதுரை: செல்போன் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த செயலியில் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை <