News September 12, 2024
ஹாட் டிஸ்க்குகளை கைப்பற்றிய போலீஸ்

சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணைக்காக 3 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர். அதன்படி, அவரை திருப்பூர் அழைத்துச் சென்று, அங்குள்ள அவருக்கு சொந்தமான பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மகாவிஷ்ணுவிடம் இருந்த ஹாட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாளை அவர் சென்னை அழைத்து வரப்பட உள்ளார்.
Similar News
News August 19, 2025
சிவாஜிக்கு பிறகு வடிவேலு தான் சிறந்த நடிகர்: வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பிறகு மிகப்பெரிய ஒரிஜினல் நடிகன் என்றால் அது வடிவேலு தான் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். வடிவேலுவுக்கு படிப்பும், சினிமா பின்புலமும் கிடையாது, ஆனால் ஒவ்வொரு படத்திலும் கேரக்டராகவே வாழ்வார் என அவர் கூறியுள்ளார். மேலும், வடிவேலு வெறும் காமெடி நடிகர் கிடையாது, கதாபாத்திரமாகவே மாறக்கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 19, 2025
அதிமுக பொ.செயலாளர் வழக்கு.. HC உத்தரவு

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி EPS மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சென்னை உரிமையியல் கோர்ட்டின் நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து EPS சென்னை HC-ல் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை செப்.3ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
News August 19, 2025
கணவர்களே பொண்டாட்டி பேச்சை கேளுங்க

மனைவியின் சொல் பேச்சை கேட்கும் கணவர்களை ‘பொண்டாட்டி தாசன்’ என்று பலரும் கிண்டல் அடிப்பது வழக்கம். ஆனால், உண்மையில் மனைவியின் கருத்தை கேட்டு நடக்கும் கணவர்கள் தான், வாழ்க்கையில் பெரியளவில் வெற்றி பெறுவதாக Harvard Business School நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கணவர்களின் சிக்கல்களை சரியாக புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற வியூகங்களை வகுத்து கொடுப்பதும் மனைவிகள் தானாம்.