News September 12, 2024
பொய் சொன்ன அதிகாரி: கண்சிவந்த உதயநிதி!

சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பத்தூரில் உள்ள ஒரு பகுதியில் புதர் மண்டி கிடப்பதாக ஒருவர் அளித்திருந்த மனு பற்றி பிடிஓ அதிகாரி சோமதாஸிடம் உதயநிதி கேட்டார். அதற்கு அவர், அந்த இடம் சுத்தப்படுத்தப்பட்டதாக கூறினார். பின்னர், போனில் உதயநிதி விசாரிக்கையில், அதிகாரி கூறியது பொய் என தெரியவந்தது. இதையடுத்து, சோமதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Similar News
News August 17, 2025
TVK 2-வது மாநாடு: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

தவெக-வின் 2-வது மாநில மாநாடு வரும் 21-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 20 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநாடு நடைபெறும் இடத்தில் குடிநீர், பாதுகாப்பு, வாகன நிறுத்தம் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவசர மருத்துவ வசதிக்காக டிரோன் மூலம் மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டத்தை என்.ஆனந்த் நேரில் பார்வையிட்டார்.
News August 17, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 17 – ஆவணி 1 ▶ கிழமை: ஞாயிறு ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 3:15 PM – 4:15 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶ எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶ குளிகை: 3:00 PM – 4:30 PM ▶ திதி: சுன்யதிதி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.
News August 17, 2025
இல.கணேசன் இடத்துக்கு அஜய் குமார் பல்லா

நாகாலாந்து கவர்னராக பதவி வகித்து வந்த இல.கணேசன் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் மணிப்பூர் கவர்னரான அஜய் குமார் பல்லா கூடுதல் பொறுப்பாக நாகாலாந்து கவர்னர் பதவியையும் சேர்த்து வகிப்பார் என ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.