News September 12, 2024

ஆர்டர் கொடுக்க வராததால் பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை

image

விருதுநகர், சிவகாசி, சாத்துார் சுற்றுப்பகுதியில் 1,080 பட்டாசு ஆலைகள் உள்ளன. நாட்டின் மொத்த உற்பத்தியில், 95 சதவீத பட்டாசுகள் இங்கு தான் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் பட்டாசு வெடிக்க பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் செய்கை தெரியாது நிற்கும் அங்குள்ள வியாபாரிகள் இதுவரை சிவகாசிக்கு மொத்த ஆர்டர் கொடுக்க வராததால் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் கவலையில் உள்ளனர்.

Similar News

News October 20, 2025

விருதுநகரில் 61 நாட்கள் நடந்த போராட்டம் வாபஸ்

image

விருதுநகரில் அரசு போக்குவரத்து தொழிற்சங்கம், சிஐடியு ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் இணைந்து தொடர்ந்து 61 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சருடன் சிஐடியு தொழிற்சங்க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 61 நாட்கள் நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

News October 19, 2025

விருதுநகருக்கு தீபாவளியன்று கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென், மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. இந்நிலையில் இன்றும், நாளையும்(அக்.19, 20) விருதுநகர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட முடியுமா என அனைவரின் மனதிலும் கேள்வி எழுந்துள்ளது.

News October 19, 2025

விருதுநகர்: ஊராட்சி செயலர் பணி., தேர்வு இல்லை

image

விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK<<>> செய்க.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!