News September 11, 2024

மகாவிஷ்ணுவுக்கு கஸ்டடியா? ஜாமினா? இன்று முடிவு

image

மூடநம்பிக்கை கருத்தை மாணவரிடம் பரப்பும் விதமாக பேசியதற்காக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு, ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதே போல் போலீசார் மகாவிஷ்ணுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தாக்கல் செய்யப்பட்ட மனுவும் அதே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 16, 2025

பிரிவினை பற்றிய பாடம்.. தேசிய அரசியலில் கொதிநிலை

image

6 – 12ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் நாட்டு பிரிவினை பற்றிய புது தொகுதியை NCERT அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் பிரிவினை கலவரங்களுக்கு ஜின்னா, காங்., மவுண்ட்பேட்டன் மூவரும் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டை பிரிக்க வேண்டும் என 1938-ல் ஹிந்து மகாசபா தான் முதலில் வலியுறுத்தியதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பொய் தகவலை கூறும் இப்புத்தகங்களை கொளுத்த வேண்டும் என்றும் சாடியுள்ளது.

News August 16, 2025

இதுக்கு பதில் சொல்லுங்க பாப்போம்!

image

ரொம்ப நேரம் நியூஸ் படிச்சி டயர்டான உங்க மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுப்போம் வாங்க. மேலே உள்ள படத்தை பாருங்க. 6-க்கும், 3-க்கும் இடையில் என்ன நம்பர் வரும் என்று கரெக்ட்டா சொல்லுங்க. பாக்க கஷ்டமா இருந்தாலும், இது ரொம்ப ஈசி. மற்ற நம்பர்களை பாருங்க. உங்களுக்கு பதில் தெரியும். பார்ப்போம் எத்தனை பேர் கரெக்ட்டா பதில் சொல்றீங்க என.

News August 16, 2025

அமலாக்கத்துறையிடம் ஐ.பி., சொன்ன விஷயம்..

image

திமுகவின் சீனியர் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் காலை முதல் ED ரெய்டு நடந்து வருகிறது. வீட்டிற்கு வந்த அதிகாரிகளிடம் ஐ.பி., பேசிய விஷயம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ”இந்த ரெய்டு எதிர்பார்த்ததுதான். தென்மண்டலத்தில் திமுக வலிமையாக இருக்கிறது. தேர்தல் வேலையை முடக்கவே இந்த ரெய்டு. முடங்கி போகமாட்டேன். என்ன செய்யணுமோ செய்யுங்க” என அதிகாரிகளிடம் ஐ.பி., கூறியுள்ளதாக தகவல்.

error: Content is protected !!