News September 11, 2024

கடலூரில் மாணவிகள் 4 பேர் திடீர் மாயம்

image

கடலூர் புதுநகரில் உள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் இன்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளியில் இருந்து வெளியே சென்றனர். ஆனால் அவர்கள் வீடு திரும்பவில்லை. அதனால் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் மாயமான 4 மாணவிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News August 19, 2025

கடலூர் மக்களே உஷார்…! ஆன்லைன் லோன் மோசடி!

image

நமது கடலூர் மக்களே உஷார்! வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இப்படியாக வரும் அழைப்புகள் மூலம் அதில், உங்களுடைய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தவறான முறையில் பயன்படுத்தி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இது போன்று பலர் ஏற்கனவே லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இது போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் உடனடியாக இந்த 1930 எண்ணுக்கு அழைத்து புகாரளியுங்கள். இதனை SHARE பண்ணுங்க!

News August 19, 2025

கடலூர்: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வேலை

image

TMB வங்கியில் புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பயிற்சியின் (Intership) போதே மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ.72,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.20) கடைசி நாளாகும், விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு<<17451949>> பாகம் 2<<>>-ஐ பார்க்கவும். SHARE NOW!

News August 19, 2025

கடலூர்: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை (2/2)

image

புராபேஷன் அதிகாரி பணிக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு உண்டு. பயிற்சி காலம் 36 மாதங்கள் ஆகும். இதற்கு 30 வயதிற்குப்பட்ட முதுகலை பட்டதாரிகள் அல்லது 28 வயதிற்குப்பட்ட இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும். வங்கியிலேயே பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர விரும்புபவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!