News September 10, 2024
விரைவில் மேலும் 10 புதிய வந்தே பாரத் ரயில்

நாட்டில் விரைவில் 10 வந்தே பாரத் ரயில்கள் விடப்பட உள்ளன. நாடு முழுவதும் அதிவேக ரயில்களான வந்தே பாரத்தை விடும் பணிகள் துரித கதியில் நடக்கின்றன. அந்த வரிசையில் வருகிற 15ம் தேதி 10 புதிய வந்தே பாரத் ரெயில்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த ரெயில்களை PM மோடி தொடங்கி வைக்கிறார். இந்த ரயில்கள் வாரணாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன.
Similar News
News July 5, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூலை 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News July 5, 2025
‘ஒன்றல்ல, 3 எதிரிகளை எதிர்கொண்டோம்’

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீனா, பாகிஸ்தான், துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக ராணுவ துணை தளபதி ராகுல் ஆர் சிங் தெரிவித்தார். துருக்கி பாகிஸ்தானுக்கு ஏராளமான ட்ரோன்களை வழங்கியது என்றும், பாக்., ராணுவ தளவாடங்களில் 81% சீனா ஹார்டுவேர்களே உள்ளதாகவும் கூறினார். மேலும் பாக்., உடனான மோதலின் போது, நமது ராணுவ நகர்வுகளை நிகழ்நேரத்தில் சீனா மூலம் பாக்., பெற்றதாக தெரிவித்தார்.
News July 5, 2025
நீங்க இப்படியா தூங்குறீங்க… இத பாருங்க

போரடித்தால் குப்புறப்படுத்து கிடப்பது (அ) அப்படியே தூங்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. இது நல்லதல்ல என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். ஆம், நீண்டநேரம் குப்புறப்படுத்துக் கிடந்தால் முதுகு, கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் வலி ஏற்படுமாம். முகத்தில் சுருக்கங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டாம். குறிப்பாக கர்ப்பிணிகள் இப்படி தூங்கக் கூடாதாம். மல்லாந்து படுத்துத் தூங்குவது தான் சிறந்ததாம்.